பதிவு செய்த நாள்
01 டிச2016
12:18
சென்னை: ஆவின் ஐஸ் கிரீம் மற்றும், 'மில்க் ஷேக்' விற்பனையை அதிகரிக்க, ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பால்வளத் துறை ஆய்வுக் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அமைச்சர், ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையத்தில் திறக்கப்பட்ட, பால் பவுடர் தொழிற்சாலைக்கு, உணவு பாதுகாப்பு மேலாண்மை தரச்சான்றிதழ், ஐ.எஸ்.ஓ., - 22000 வழங்கப்பட்டுள்ளது. ஊட்டியில் அமைந்துள்ள, கருவூல ஜெர்சி பொலி காளை பண்ணையில், தரம் வாய்ந்த உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்ததற்காக, மத்திய அரசால், 2015 - 16ம் ஆண்டுக்கு, 'ஏ' கிரேடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பெற்றதற்காக, ஆவின் நிறுவனத்திற்கு, அமைச்சர் பாராட்டு தெரிவித்து, அதற்கான சான்றிதழ்களை, ஆவின் நிர்வாக இயக்குனர், சுனீல் பாலிவாலிடம் வழங்கினார். பெரம்பலுார் மாவட்டத்தில், தினசரி ஒரு லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை அமைக்கும் பணி முடிந்து, சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 20 கோடி ரூபாய் செலவில், கால்நடை தீவனத் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. மதுரை பால் பண்ணையில், 45 கோடி ரூபாய் செலவில், ஐஸ் கிரீம் தொழிற்சாலை; உளுந்துார்பேட்டையில், 83 கோடி ரூபாய் செலவில், பாலிதீன் பிலிம் தொழிற்சாலை அமைக்கும் பணியை, விரைவாக துவக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது தினசரி, 3,500 முதல், 4,000 லிட்டர் ஐஸ் கிரீம் விற்பனையாகிறது. இதை, 8,000 லிட்டராக உயர்த்தவும், ஆவின் மில்க் ஷேக் மற்றும் நறுமணப் பால், 'டெட்ரோ பேக்' விற்பனையை, 6.50 லட்சத்தில் இருந்து, 10 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|