தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.336 குறைவு ... மாருதி சுசூ­கியின் விற்­பனை 1.35 லட்சம் கார்கள் மாருதி சுசூ­கியின் விற்­பனை 1.35 லட்சம் கார்கள் ...
ஐஸ் கிரீம் விற்பனையை உயர்த்த ஆவின் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2016
12:18

சென்னை: ஆவின் ஐஸ் கிரீம் மற்றும், 'மில்க் ஷேக்' விற்பனையை அதிகரிக்க, ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பால்வளத் துறை ஆய்வுக் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. அமைச்சர், ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். திருவண்ணாமலை மாவட்டம், அம்மாபாளையத்தில் திறக்கப்பட்ட, பால் பவுடர் தொழிற்சாலைக்கு, உணவு பாதுகாப்பு மேலாண்மை தரச்சான்றிதழ், ஐ.எஸ்.ஓ., - 22000 வழங்கப்பட்டுள்ளது. ஊட்டியில் அமைந்துள்ள, கருவூல ஜெர்சி பொலி காளை பண்ணையில், தரம் வாய்ந்த உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்ததற்காக, மத்திய அரசால், 2015 - 16ம் ஆண்டுக்கு, 'ஏ' கிரேடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பெற்றதற்காக, ஆவின் நிறுவனத்திற்கு, அமைச்சர் பாராட்டு தெரிவித்து, அதற்கான சான்றிதழ்களை, ஆவின் நிர்வாக இயக்குனர், சுனீல் பாலிவாலிடம் வழங்கினார். பெரம்பலுார் மாவட்டத்தில், தினசரி ஒரு லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை அமைக்கும் பணி முடிந்து, சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 20 கோடி ரூபாய் செலவில், கால்நடை தீவனத் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. மதுரை பால் பண்ணையில், 45 கோடி ரூபாய் செலவில், ஐஸ் கிரீம் தொழிற்சாலை; உளுந்துார்பேட்டையில், 83 கோடி ரூபாய் செலவில், பாலிதீன் பிலிம் தொழிற்சாலை அமைக்கும் பணியை, விரைவாக துவக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது தினசரி, 3,500 முதல், 4,000 லிட்டர் ஐஸ் கிரீம் விற்பனையாகிறது. இதை, 8,000 லிட்டராக உயர்த்தவும், ஆவின் மில்க் ஷேக் மற்றும் நறுமணப் பால், 'டெட்ரோ பேக்' விற்பனையை, 6.50 லட்சத்தில் இருந்து, 10 லட்சமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)