பதிவு செய்த நாள்
04 டிச2016
05:11
ஆமதாபாத்,:அமுல் நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களில், ஒட்டகப் பால்விற்பனையை துவக்க உள்ளது. குஜராத் மாநில பால் கூட்டுறவுஅமைப்பு, ‘அமுல்’ என்ற பிராண்டில், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அடுத்தகட்டமாக இந்நிறுவனம், இன்னும் மூன்று மாதங்களில், ஒட்டகப் பால் விற்பனையை துவக்க முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஹர்தீப் பங்கா கூறியதாவது:எங்கள் நிறுவனம், மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய சான்றிதழுடன், ஒட்டகப் பாலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, அரை லிட்டர் பாட்டிலில், ஒட்டகப் பால், குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் உள்ள, 500 அமுல் பாலகங்களில் விற்கப்படும். பால் விற்பனை மூன்று மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான ஆலை கட்ச் நகரில் அமைந்துள்ளது.இந்த பால் தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி, விற்பனைக்கு தயாராவதற்கு நாங்கள் இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொண்டோம்.
இந்த இரண்டு ஆண்டு கால முயற்சியில், எங்களுடைய ஒட்டகப்பால் தரத்துடன் இருப்பதோடு, மக்கள் விரும்பி வாங்கவும் முன்வருவர்; நல்ல வரவேற்பு அவர்களிடம் இருக்கும் என்பதையும் அறிந்து கொண்டோம்.இதற்கிடையே பல தன்னார்வ அமைப்புகளும் ஒட்டகப் பாலின் பயன்கள் குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர். இது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, உணவு பாதுகாப்பு ஆணைய தலைவர் பவன் அகர்வால் கூறுகையில், ‘‘ஒட்டகப் பால் விற்பனைக்கு, தர நிர்ணய சான்று வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,முக்கிய நகரங்களில், தரமான ஒட்டகப் பால் விற்பனை செய்வது உறுதி செய்யப்படும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|