பதிவு செய்த நாள்
06 டிச2016
03:27
புதுடில்லி:சர்வதேச திறன்களை, இந்தியர்களுக்கு வழங்குவதற்காக, மத்திய அரசு,‘வெளிநாட்டு திறன் அபிவிருத்தி திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து, வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை செயலர் மனீஷ் குப்தா கூறியதாவது:வெளிநாட்டு நிறுவனங்கள், பல்வேறு திறன்களின் அடிப்படையில், பணியாளர்களை நியமிக்கின்றன. அத்தகைய சர்வதேச திறன்களை, இந்தியர்களுக்கு வழங்கும் நோக்கில், மத்திய அரசு, ‘வெளிநாட்டு திறன் அபிவிருத்தி திட்டம்’ என்ற திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, மத்திய வெளி விவகாரங்கள் அமைச்சகத்திற்கும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்திற்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட துறைகளில், வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளோர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, சர்வதேச தரத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம், அவர்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் நேர்காணலை சுலபமாக எதிர்கொண்டு, பணியில் சேர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|