பதிவு செய்த நாள்
06 டிச2016
03:30
ஐதராபாத்‘‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலானால், தயாரிப்புத் துறை வளர்ச்சி காணும்; வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்,’’ என, கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் ஆதி கோத்ரெஜ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் பேசியதாவது:அடுத்த ஆண்டு, ஏப்., 1 முதல், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கிறேன். இந்த சட்டத்தில், ஒரு சில அம்சங்களில், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
அவற்றுக்கு, விரைவில் தீர்வு காணப்பட்டு விடும். ஜி.எஸ்.டி., அமலானால், பல முனை வரிகள் முடிவுக்கு வரும். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு அமலாகும். இதனால், பொருட்களின் தேவை அதிகரிக்கும். இது, தயாரிப்புத் துறையின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
எல் அண்ட் டி நிறுவனம், அதன் பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த, 14 ஆயிரம் ஊழியர்களுக்கு, கட்டாய பணி விடுப்பு வழங்கியுள்ளது குறித்து பேசப்படுகிறது. இப்படி நடப்பது ஒன்றும் புதிது அல்ல. ஒவ்வொரு நிறுவனமும், அதன் கொள்கைகளை பின்பற்றி, நடவடிக்கை எடுக்கின்றன. வேலைவாய்ப்பு என்பது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை, நேரடியாக சார்ந்துள்ளது.
தாராளமயமாக்கல் கொள்கைக்கு எதிராக, சில நாடுகள் நடந்து கொள்வது குறித்து, இந்தியா கவலை கொள்ள தேவையில்லை. ஏனெனில், சர்வதேச ஏற்றுமதியில், இந்தியாவின் பங்கு, மிகக் குறைவாகவே உள்ளது. போட்டியை சமாளிக்கும் வகையில், நல்ல கொள்கைகள் இருந்தால், இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|