பதிவு செய்த நாள்
07 டிச2016
05:07
புதுடில்லி:நுகர்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் டாபர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில், வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வெளிப்படையாக மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.
இதனால், அமைப்பு சார்ந்த நுகர்பொருள் நிறுவனங்கள் பயன்பெறும். எனினும் தற்போதைய பணத் தட்டுப்பாடு பிரச்னையால், நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை கூற முடியாது. ஏனெனில், தற்போது புதிய கரன்சிகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. அதே சமயம், ‘பிளாஸ்டிக் கார்டு’ பயன்பாடும் பெருகி வருகிறது. மத்திய அரசு, ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளால், சில்லரை வியாபாரிகளும் தற்போது, ‘பாய்ன்ட் ஆப் சேல்’ சாதனங்களை நிறுவி, மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். அதனால், வரும் மாதங்களில் பணத் தட்டுப்பாடு பிரச்னை நீங்கி, இயல்பு நிலை திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|