பதிவு செய்த நாள்
08 டிச2016
01:19
மும்பை: பானாசோனிக் இந்தியா நிறுவனம், ஹரியானா மாநிலத்தில், புதிதாக உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க, 115 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவில் இயங்கி வரும், பானாசோனிக் இந்தியா நிறுவனம், ஹரியானாவில், புதிய ஆலையை அமைக்கிறது. இதற்காக, 115 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இங்கு, ரெப்ரிஜிரேட்டர்கள் தயாரிக்கப்படும்.இது குறித்து, பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, மனீஷ் சர்மா கூறியதாவது:ஹரியானாவில் அமைய இருக்கும் இந்த ஆலை, 1 லட்சத்து, 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இந்த ஆலையின் உற்பத்தித் திறன், 5 லட்சம் சாதனங்களாகும். 2017 நவம்பரில், இந்த ஆலை செயல்பட துவங்கும். இங்கு தயாராகும் பொருட்கள், 2018ல் விற்பனைக்கு விடப்படும்.இங்கு தயாரிக்கப்படும், குறைந்த கொள்ளளவு கொண்ட, ரெப்ரிஜிரேட்டர்கள், சிறிய நகரங்களில் சந்தைப்படுத்தப்படும். ஹரியானா ஆலையில் ஆரம்ப கட்டத்தில், 300 முதல், 330 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரெப்ரிஜிரேட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்திய ரெப்ரிஜிரேட்டர் சந்தையில், பானாசோனிக் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 1.5 சதவீதமாக இருக்கிறது. 2018ல், இதை, 5 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2018ல், இப்பிரிவிலிருந்து, 600 கோடி ரூபாய் வருவாயை நிறுவனம் எதிர்பார்க்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|