பதிவு செய்த நாள்
08 டிச2016
14:15
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பாக்ஸ்கான் நிறுவன அதிபர் டெர்ரி கோவ் கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாகவது : டிரம்ப் அவர்களே, உங்களுக்கு என்னை தெரியாது. நான் நீங்கள் பயன்படுத்தும் ஐபோனை தயாரித்த டெர்ரி கோவ். முதலில் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் வெற்றியை எனது வெற்றியாக கருதுகிறேன். அடுத்த முறை நீங்கம் தைவான் அதிபருடன் பேசும் போது, அதன் மற்றொரு முனையில் நானும் இருப்பேன். உங்களுக்கும் எனக்கும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் உள்ளது.
நாம் இருவருமே பணக்காரர்கள். நாம் இருவருமே வால் ஸ்ட்ரீட்டை வெறுப்பவர்கள். ஏராளமான வேலைவாய்ப்புக்களை உருவாக்க போவதாக நீங்கள் மக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளீர்கள். அது தொடர்பாக சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். முதலில், எந்த வேலைவாய்ப்பையும் நீங்கள் உருவாக்க வேண்டாம். நீங்கள் அதை உருவாக்குவீர்கள் என மக்களை நினைக்க வையுங்கள். அதில் நீங்கள் நிச்சயமாக கைதேர்ந்தவர்.
நீங்கள் பிரேசில், இந்தோனேஷியா, இந்தியா, பாதிக்கும் மேற்பட்ட சீன மாகாணங்கள் போன்றவற்றில் நான் பார்த்துள்ளேன். இதுவரை நான் ஒரு ஐபோனை கூட உருவாக்கியதில்லை. இனிமேலும் உருவாக்க போவதில்லை. நான் 10 பில்லியன் டாலர்களை மொபைல் போன் தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ளேன். கடந்த ஆண்டு 75 டாலர் வருமானம் பெற்றுள்ளேன்.
பிரேசிலில் ஐபோன்களை தயாரிக்கும்படி ஆப்பிள் என்னிடம் கூறியது. நானும் அதை செய்தேன். நான் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட லிகோ போன்ற ஐபோன்களை நான் ஏற்றுமதி மட்டுமே செய்தேன். அதுன் மூலம் சிலர் வேலை பெற்றனர். இதனால் ஆப்பிள் நிறுவனத்தினரும், பிரேசில் தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்க நீங்கள் விரும்பினால் அதனையும் நான் செய்து தருகிறேன். நீங்கள் விரும்பினால், டிரம்ப் டவர்சிலேயே ஐபோன் தயாரிப்பு ஆலையை அமைக்கிறேன். அதற்கான ஆலைகள், தொழிலாளர்கள், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை நானே பார்த்துக் கொள்கிறேன். நான் சீனாவில் உற்பத்தி ஆலை வைத்திருக்கவில்லை. ஆனால் அங்கு ஆயிரக்கணக்கான விநியோகஸ்தர்களை வைத்துளேன். இதனால் வெகு தொலைவில் இருந்து கொண்டெ ஒரு மில்லியன் பேருக்கு வேலை தருகிறேன்.
அமெரிக்காவில் நிச்சயம் அதிக அளவில் ரோபோக்களை என்னால் உருவாக்க முடியும். ஆனால் அதற்கு பயிற்சி அளிப்பதற்கு பல மாதங்கள் ஆகும். அதே வேலையை மனிதர்கள் சில மணி நேரத்தில் செய்து விடுவார்கள். ரோபோக்கள் அதிக அளவில் தயாரிப்பதானால், வேலைவாய்ப்புக்கள் குறையும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு சுவரை நீங்கள் எழுப்ப திட்டமிட்டாலும், அதற்கு செலவு செய்ய சிலர் தயாராக இருப்பார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|