பதிவு செய்த நாள்
10 டிச2016
04:57
புதுடில்லி:அல்காடெல், ஐந்து மாநிலங்களில், 5,000 கடைகள் மூலம், மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க உள் ளது. அல்காடெல் இந்தியா, ஸ்மார்ட் போன் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வரும் மார்ச் மாதத்திற்குள், ஐந்து மாநிலங்களில், 5,000 கடைகள் மூலம், மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி பிரவீன் வலேக்ஹா கூறியதாவது:எங்கள் நிறுவனம், மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. தற்போது, குறிப்பிட்ட சில மாநிலங்களில் உள்ள, 700 கடைகளில், எங்கள் போன்கள் விற்கப்படுகின்றன. வரும் மார்ச்சுக்குள், தமிழகம், கர்நாடகா, டில்லி, உ.பி., – மஹாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில், தலா, 1,000 கடைகளில், அல்காடெல் போன்கள் விற்பனை செய்யப்படும். எங்கள் நிறுவனத்தின் இணையதள சந்தை பங்களிப்பு, 2 – 3 சதவீதம்; கடைகளில், 3 – 4 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, 2018ல், 10 சதவீதமாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|