பதிவு செய்த நாள்
08 ஜன2017
01:46
புதுடில்லி:உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு ஆசியாவில், இந்திய வாகன துறை, 1.90 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கி, முதலிடத்தில் உள்ளது. இந்திய வாகன உதிரிபாக நிறுவனங்கள், சிறந்த தொழில்நுட்பங்களை பின்பற்றி, சர்வதேச சந்தையில் பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனினும், இத்துறையின் சர்வதேச ஏற்றுமதியாளர்களுடன் ஒப்பிடும் போது, இந்திய வாகன உதிரிபாகங்கள் துறை, உற்பத்தியில் பின்தங்கி உள்ளது.
இந்நிலையில், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. உதாரணமாக, போஷ் நிறுவனம், பெங்களூரில், 15 ஆயிரம் ஊழியர்களுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை அமைத்துள்ளது.விரைவில், பி.எம்.டபிள்யு., மெர்சிடஸ் பென்ஸ் போன்ற, பன்னாட்டு வாகன நிறுவனங்களும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை, இந்தியாவில் அமைக்க உள்ளன. இது, வாகன உதிரிபாகங்கள் துறையின் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|