பதிவு செய்த நாள்
10 ஜன2017
17:50
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் ஆரம்பித்து உயர்வுடனேயே முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் காணப்பட்ட போதிலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது, ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. குறிப்பாக ஆட்டோமொபைல், வங்கி உள்ளிட்ட பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பித்து உயர்வுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 173.01 புள்ளிகள் உயர்ந்து 26,899.56-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 52.55 புள்ளிகள் உயர்ந்து 8,288.60-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|