பதிவு செய்த நாள்
13 ஜன2017
15:58
மும்பை : இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாப உயர்வு அறிவிப்பால் காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. பிற்பகல் வர்த்தகத்தின் போது இன்போசிஸ் நிறுவன பங்குகள் சரிவடைந்ததே பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 9.10 புள்ளிகள் சரிந்து 27,238.06 புள்ளிகளாகவும், நிப்டி 6.85 புள்ளிகள் சரிந்து 8400.35 புள்ளிகளாகவும் இருந்தன.
பிற்பகல் வர்த்தகத்தின் போது, முக்கிய நிறுவன பங்குகள் சரிய துவங்கியதால், நிப்டி 8400 புள்ளிகளை கடந்திருந்த போதிலும் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, கெயில், ஹச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டிசிஎஸ், இன்போசிஸ், என்டிபிசி, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|