பதிவு செய்த நாள்
16 ஜன2017
23:43
புதுடில்லி : மத்திய அரசின், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், கறுப்புப் பணப்புழக்கம் பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, அதிகளவில் கறுப்புப் பணம் புழங்கி வந்த, ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு, அக்., – டிச., வரையிலான காலாண்டில், குடியிருப்புகள் விற்பனை, 50 சதவீதம் வீழ்ச்சியடைந்து உள்ளது. இனி, ரியல் எஸ்டேட் துறை வர்த்தகம் அனைத்தும், வெளிப்படையாக, காசோலை, மின்னணு பரிவர்த்தனை போன்றவற்றின் மூலம் நடைபெறும் சூழல் உருவாகி உள்ளது.
இழப்பு அதனால், ‘வெள்ளை’ பணத்தில், அதாவது, முறையாக கணக்கு காட்டப்பட்ட பணம் மூலம் நிலம், குடியிருப்பு ஆகியவற்றை வாங்குவோரை, ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்நோக்கி உள்ளனர். ஆனால், நிலம், குடியிருப்பு ஆகியவற்றின் விலை மேலும் குறையும் என, வாங்குவோர் காத்திருக்கின்றனர். வங்கிகள், வீட்டுவசதி கடனுக்கான வட்டியை மேலும் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாகவும், அவர்கள் வீடு வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்துள்ளனர். இதனால், குறிப்பாக, கட்டுமான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பத்திரப்பதிவும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நடைமுறைகளில், 22,600 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, கட்டுமான நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன; மாநில அரசுகளுக்கு, 1,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, முத்திரைத் தாள் கட்டண வருவாய் குறைந்துள்ளது’ என, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘கினைட் பிராங்க் இந்தியா’ தெரிவித்துள்ளது. புதிய குடியிருப்புகள் மட்டுமின்றி, பழைய வீடுகள் விற்பனையும் பெருமளவு சரிவடைந்து உள்ளது.
பழைய வீடுகளின் பெரும்பான்மை விற்பனை, ரொக்கத்தில் தான் நடைபெறுகிறது. இதில் தான், அதிகளவில் கறுப்புப் பணம் புழங்கி வந்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பழைய வீடுகள் விற்பனை அடியோடு முடங்கிஉள்ளது.
சரிவை தடுக்க‘கடந்த, 2016ல், அக்., – டிச., வரையிலான காலாண்டில், சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில், வீடு விற்பனை, 2015ம் ஆண்டின் இதே காலாண்டில் மேற்கொள்ளப்பட்டதை விட, 44 சதவீதம் குறைந்துள்ளது; புதிய கட்டுமான திட்டங்களும், 61 சதவீதம் குறைந்துள்ளன’ என, கினைட் பிராங்க் அறிக்கை தெரிவிக்கிறது. ரியல் எஸ்டேட் துறையின் இந்த சரிவை தடுக்கவும், பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கவும், பல மாநிலங்கள், நில வழிகாட்டி மதிப்பு, முத்திரைத் தாள் கட்டணம் ஆகியவற்றை குறைப்பது குறித்து, ஆலோசித்து வருகின்றன.
மத்திய அரசின், புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், பினாமி சொத்துகள் சட்டம் ஆகியவை, இனி, ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பணப்புழக்கத்தை அடியோடு முடிவுக்கு கொண்டு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நகரம் வீடு விற்பனை சரிவுடில்லி, என்.சி.ஆர்., 53மும்பை 50பெங்களூரு 45ஐதராபாத் 40புனே 35சென்னை 31கோல்கட்டா 20(2016 அக்., – டிச., வரை சதவீதத்தில்)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|