பதிவு செய்த நாள்
18 ஜன2017
03:03
மும்பை : ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள, நொமுண்டி இரும்புச் சுரங்கத்தில், டிரோன் எனப்படும், ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கும் நடைமுறை, சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.நாட்டிலேயே, முதன்முறையாக, சுரங்கங்களில், ஆளில்லா விமான கண்காணிப்பு முறை இங்கு தான் அமல்படுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, மத்திய சுரங்க அமைச்சகத்தின் செயலர் பல்விந்தர் குமார் கூறியதாவது:டிரோன் மூலம், சுரங்கங்கள், குவாரிகளில் சட்ட விரோதமாக நடைபெறும், அனைத்து நடவடிக்கைகளையும் கண்டுபிடிக்க முடியும்.மனிதனால் செல்ல முடியாத இடத்திற்கும் கூட, ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி, பல தகவல்களை பெற முடியும்.இவ்வாறு கூறினார்.டாடா ஸ்டீல் நிறுவனம், நொமுண்டி சுரங்கத்தை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|