பதிவு செய்த நாள்
23 ஜன2017
07:27
உலகமயமாக்கலால், அதிகம் பயனடைந்த நாடாக, சீனா விளங்குகிறது. இந்தியாவும், இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளது.
உலகமயமாக்கல், சர்வதேச நாடுகளையே தடையற்ற வர்த்தகத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த நிகழ்வால், சீனா அதிகம் பயனடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.சர்வதேச நிதியமான, ஐ.எம்.எப்., அக்டோபரில் வெளியிட்ட, உலக பொருளாதார பார்வை அறிக்கை தெரிவிக்கும் தகவல் படி, 1990ல், உலக ஜி.டி.பி.,யில், 4.1 சதவீதமாக இருந்த சீனாவின் பங்கு, 2016ல், 17.86 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், உலக, ஜி.டி.பி.,யில் இந்தியாவின் பங்கு, 3.6 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளின், ஜி.டி.பி., பங்கும் உயர்ந்துள்ளது. உலகமயமாக்கல், நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து உள்ளதாக கருதப்பட்டாலும், இந்த போக்கால் மற்ற நாடுகளை விட, ஒரு சில நாடுகள் அதிகம் பயனடைந்து உள்ளன.
இதே காலத்தில், வளர்ச்சி அடைந்த நாடுகளான, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின், ஜி.டி.பி., பங்கு குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின், ஜி.டி.பி., பங்கும் குறைந்துள்ளது.ஆப்ரிக்க மற்றும் வளைகுடா நாடுகளின், ஜி.டி.பி., பங்கு ஓரளவு உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|