பதிவு செய்த நாள்
24 ஜன2017
10:08
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கியிருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜன., 24-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.36 புள்ளிகள் உயர்ந்து 27,217.70-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 36.20 புள்ளிகள் உயர்ந்து 8,427.70-ஆகவும் இருந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாகவும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருப்பதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.30 சதவீதம் உயர்ந்தும், ஷாங்காயின் இண்டெக்ஸ் 0.09 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.07 சதவீதமும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|