பதிவு செய்த நாள்
24 ஜன2017
23:58
புதுடில்லி : ‘இந்தாண்டு, இந்தியாவில் குடியிருப்புகளின் விற்பனை, 20 – 30 சதவீதம் குறையும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், ஆசிய – பசிபிக் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த, கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்தால், இந்தாண்டு, இந்தியாவில் குடியிருப்புகளின் விற்பனை, 30 – 40 சதவீதம் குறையும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்நிறுவனம், இந்திய குடியிருப்பு துறை சார்ந்த நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பீட்டை, ஸ்திரத்தன்மையில் இருந்து, பாதிக்க வாய்ப்புள்ள பிரிவிற்கு மாற்றிஉள்ளது.
ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில், மூன்றில் ஒரு பங்கு நாடுகளின் கடன் தகுதி நிர்ணயத்தை, பிட்ச் நிறுவனம் குறைத்துள்ளது. சீனாவின் குடியிருப்பு துறைக்கு, கடந்த ஆண்டு சாதகமான தரக் குறியீட்டை வழங்கிய பிட்ச், இந்தாண்டு, அதை ஸ்திரத்தன்மைக்கு குறைத்துள்ளது. சீனாவில் வீடுகள் விற்பனை, 15 சதவீதம் வீழ்ச்சியடையும் என, பிட்ச் மதிப்பிட்டு உள்ளது.சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஆசிய நாடுகள் அதிக வளர்ச்சியுடன் காணப்பட்டாலும், சில ஆண்டுகளாக, குறிப்பாக, சீனாவின் வளர்ச்சி மந்தமாக உள்ளது என, பிட்ச் தெரிவித்து உள்ளது.
டாலர் மதிப்பு உயர்வு; சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு; அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழல் போன்றவை, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.அத்துடன், கொள்கை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள சாதகமற்ற சூழல்; அளவிற்கதிகமான உற்பத்தித் திறன்; அதிகரித்து வரும் போட்டி போன்றவையும், ஆசிய – பசிபிக் நாடுகளுக்கு சவாலாக உள்ளன என, பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|