பதிவு செய்த நாள்
05 பிப்2017
04:53
மும்பை;இருசக்கர வாகன விற்பனையில், இரண்டாவது பெரிய நிறுவனமான, ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா, ௧௦ ஆண்டுகளில், ௫௦ லட்சம், சி.பி., ஷைன் பைக்குகளை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.இந்நிறுவனத்திற்கு, ராஜஸ்தான் மாநிலம், தப்புகராவில், தொழிற்சாலை உள்ளது. இங்கு, 50 லட்சமாவது, சி.பி., ஷைன் பைக் தயாரிக்கப்பட்டு உள்ளது.அனைத்து புதிய, சி.பி., ஷைன் பைக்குகளும், மாசு கட்டுபாட்டு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளன.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் கெய்டா முரமஸ்து கூறியதாவது:உலகளவில், இந்தியா, மிக முக்கிய சந்தையாக இருந்து, நிறுவனத்தின் வேகமான வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது.நிறுவனம், முதன்முதலில், 2006 ஏப்ரலில், சி.பி., ஷைன் மோட்டார் சைக்கிளை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து, 125 சிசி பிரிவில், தற்போது, 50 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், இப்பிரிவில், நிறுவனம், புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|