பதிவு செய்த நாள்
18 பிப்2017
04:47
மும்பை : டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்டர் புட்ஸ்செக் கூறியதாவது: கார் வாங்குவோர் மேம்பட்ட சேவைகளை எதிர்பார்க்கின்றனர். அதனால், தகவல் தொழில்நுட்பம் மூலம், அதிநவீன வசதிகளை, கார்களில் அறிமுகப்படுத்த, டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சாலையில் பாதுகாப்பாக செல்வதற்கும், ஓட்டுனர்கள், தொலைவில் உள்ள பொருட்களை முன்னதாகவே அறிந்து கொண்டு, எச்சரிக்கையுடன் வாகனத்தை செலுத்தவும், ‘சென்சார்’ சாதனங்கள் உதவுகின்றன. இவ்வகை தொழில்நுட்ப வசதிகளுடன், டாடா கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
டாடா காரில் பயணம் செய்வோர், தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், புதிய அனுபவத்தை பெறலாம். ஜெனிவாவில், மார்ச், 7ல் நடைபெறும் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சியில், அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட டாடா கார் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|