பதிவு செய்த நாள்
20 பிப்2017
18:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமான நிலையில் டிசிஎஸ்., நிறுவனத்தின் பை-பேக் அறிவிப்பால் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 40 புள்ளிகளும், நிப்டி 8 புள்ளிகளும் சரிவுடன் ஆரம்பமாகின. ஆனால், ஐடி நிறுவனத்தின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ்., இன்று ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு பை-பேக் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் வர்த்தகம் ஏற்றம் கண்டன. இதனால் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 192.83 புள்ளிகள் உயர்ந்து 28,661.58-ஆகவும், நிப்டி 57.50 புள்ளிகள் உயர்ந்து 8,879.20-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ்., நிறுவன பங்குகள் 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|