‘டிஜிட்டல்’ முறைக்கு மாறினால்  வருவாய் 20 சத­வீதம் உயரும்‘டிஜிட்டல்’ முறைக்கு மாறினால் வருவாய் 20 சத­வீதம் உயரும் ... வங்கி சேமிப்பு கணக்கில் வாரம் ரூ.50,000 எடுக்கலாம் வங்கி சேமிப்பு கணக்கில் வாரம் ரூ.50,000 எடுக்கலாம் ...
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால் பாதிப்பு; கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் புலம்பல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2017
00:21

புது­டில்லி : மத்­திய அரசின், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், நடப்பு நிதி­யாண்டின், அக்., – டிச., வரை­யி­லான மூன்­றா­வது காலாண்டில், சோப்பு முதல், சிமென்ட் வரை, பல்­வேறு தயா­ரிப்­பு­களில் ஈடு­பட்டு வரும் நிறு­வ­னங்­களின் விற்­பனை பாதிக்­கப்­பட்டு உள்­ளது.
கடந்த ஆண்டு, நவ., 8ல், உயர் மதிப்பு கரன்­சிகள் செல்­லாது என, அறி­விக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து ஏற்­பட்ட பணத் தட்­டுப்­பாடு கார­ண­மாக, மக்­களின் தேவை குறைந்து, பொருட்­களின் விற்­பனை சரி­வ­டைந்­தது. ‘பண மதிப்பு நீக்க பாதிப்பு தற்­கா­லி­க­மா­னது; நீண்ட கால அளவில், பய­ன­ளிக்கக் கூடி­யது’ என, அர­சுக்கு ஆத­ர­வாக, பெரும்­பான்­மை­யான தொழி­ல­தி­பர்கள் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர்.
சரிவுபஜாஜ் ஆட்டோ நிர்­வாக இயக்­குனர் ராஜிவ் பஜாஜ் உள்­ளிட்ட, ஓரிரு தொழி­ல­தி­பர்கள் மட்­டுமே, அரசின் நட­வ­டிக்­கைக்கு, பகி­ரங்க எதிர்ப்பு தெரி­வித்­தனர். இந்­நி­லையில், பங்குச் சந்தை பட்­டி­யலில் உள்ள, கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் பல­வற்றின் மூன்­றா­வது காலாண்டு, நிதி நிலை அறிக்கைகள் வெளி­யாகி உள்­ளன. அவற்றில், பண மதிப்பு நீக்­கத்தால், விற்­பனை குறைந்து, விற்­று­முதல் வளர்ச்சி குறைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
பணப்­பு­ழக்கம் குறைந்­ததால், சிமென்ட் தேவை குறைந்து, விற்­பனை மந்­த­ம­டைந்­த­தாக, ஆதித்ய பிர்லா குழு­மத்தைச் சேர்ந்த, அல்ட்ரா டெக் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. ‘சரி­வ­டைந்த கைக்­க­டி­கா­ரங்கள் விற்­பனை, இன்னும் அதி­க­ரிக்­க­வில்லை’ என, டாடா குழு­மத்தின் டைடன் நிறு­வனம் கூறி­யுள்­ளது.இக்­கு­ழு­மத்தைச் சேர்ந்த, தனிஷ்க் நிறு­வனம், பண மதிப்பு நீக்க அறி­விப்பு அன்று, அது­வரை காணாத வகையில், தங்க நகை விற்­பனை உயர்ந்­த­தா­கவும், அதன்பின், மந்­த­ம­டைந்­த­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.
நக­ரங்­களை விட, கிரா­மப்­பு­றங்­களில், கார், டிராக்டர் ஆகி­ய­வற்றின் விற்­பனை வீழ்ச்­சி­யுற்­ற­தாக, அவற்றை தயா­ரிக்கும் மகிந்­திரா குழுமம் கூறி­உள்­ளது. பஜாஜ் உள்­ளிட்ட, இரு­சக்­கர வாகன நிறு­வ­னங்­களும், ‘சரி­வ­டைந்த விற்­பனை, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்­ப­வில்லை’ என, தெரி­வித்­துள்­ளன. ஐ.டி.சி., நிறு­வனம், அதன், பிஸ்கட், நுாடுல்ஸ், அழகுப் பொருட்கள் உள்­ளிட்­ட­வற்றின் விற்­பனை வீழ்ச்­சி­ய­டைந்து உள்­ள­தாக கூறி­யுள்­ளது.
பாதிப்புபணத் தட்­டுப்­பாடு பிரச்­னையால், கடன் தவணை வசூல் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக, உஜ்­ஜிவன் பைனான்­சியல் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. தாபர் இந்­தியா நிறு­வனம், அதன் ஷாம்பூ, பற்­பசை, கேச பரா­ம­ரிப்பு எண்ணெய் உள்­ளிட்ட பொருட்­களின் விற்­பனை, நவம்­பரை விட, டிசம்­பரில், 50 சத­வீதம் குறைந்­தி­ருந்­த­தாக கூறி­யுள்­ளது. காபி டே நிறு­வனம், இரு வாரங்கள் வரை, காபித் துாள் விற்­பனை குறைந்து, பின், நிலைமை சீர­டைந்­த­தாக தெரி­வித்­துள்­ளது. அது போல, கோத்ரெஜ் கன்ஸ்­யூமர், ஜோதி லேப்ஸ், அட்லாப்ஸ் என்­டர்­டெ­யின்மென்ட், இந்­தியா சிமென்ட்ஸ், தல்­வால்கர்ஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ் உள்­ளிட்ட, பல நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­பட்­ட­தாக கூறி­யுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)