பதிவு செய்த நாள்
21 பிப்2017
23:52
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி ஆலை அமைக்க, மத்திய அரசு, சாதகமான முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில், மொபைல் போன் உற்பத்தி ஆலை அமைக்கும் கோரிக்கை குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், சாதகமான முடிவு எடுக்கும் என, தெரிகிறது. என்றாலும், மொபைல் உற்பத்தி ஆலை அமைக்க, பிரதமர் அலுவலகத்தின் இறுதி ஒப்புதல் வேண்டும். கடந்த மாதம், ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன் தொழிற்சாலை அமைப்பதற்கான செயல் திட்டத்தை தயாராக வைத்துள்ளதாக, மத்திய அரசிடம் தெரிவித்திருந்தது. மேலும், பல்வேறு சலுகைகளையும், மத்திய அரசிடம் கேட்டிருந்தது.
குறிப்பாக, அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்துமாறு, ஆப்பிள் நிறுவனம் கோரி வருகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில், ரெடிங்டன், இன்கிராம் மைக்ரோ நிறுவனங்கள் மூலம், அதன் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|