பதிவு செய்த நாள்
23 பிப்2017
00:38
சிங்கப்பூர் : சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழிலக கூட்டமைப்பு, சிங்கப்பூரைச் சேர்ந்த, இன்டர்நேஷனல் என்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் வர்த்தக கூட்டமைப்பு என்ற, இரு வர்த்தக அமைப்புகளுடன், தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
முதன்முதலாக, இந்தியா – சிங்கப்பூர் வர்த்தக அமைப்புகள் இடையே, இத்தகைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, இந்தியாவுக்கான, சிங்கப்பூர் துாதர் ஜாவத் அஷ்ரப் கூறியதாவது: இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் நல்லுறவை மேலும் வலுப்படுத்தி, வர்த்தக விரிவாக்கத்திற்கு துணை புரியும். இரு நாட்டு நிறுவனங்களும், சுலபமாக தொழில் புரிய, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். ஆசிய சந்தைகளின் நுழைவாயிலாக, சிங்கப்பூர் உள்ளது. இதை, இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தி, தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அது போல, இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை, சிங்கப்பூர் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|