பதிவு செய்த நாள்
23 பிப்2017
00:40
புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி, டி.வி.மோகன்தாஸ் பாய் கூறியதாவது:இந்தியாவின் வெற்றி நாயகர்களாக, ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி, இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட, ஏராளமான தொழிலதிபர்கள் உள்ளனர். அத்தகையோர், நாட்டுக்காக ஏராளமான சொத்துகளையும், கோடிக் கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ளனர். அவர்களின் வெற்றியை, நாம் கொண்டாட வேண்டும்.
முகேஷ் அம்பானி, மக்கள் குறைந்த கட்டணத்தில், மொபைல் போன் மூலம் இணைய வசதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், செயல்பட்டு வருகிறார். இது போன்ற தொழிலில் வெற்றி பெற்றோரை, நாம் ஏன் கொண்டாடக் கூடாது; அவர்களை, ஏன் பெருமைப்படுத்தக் கூடாது; முகேஷ் அம்பானி, நாராயணமூர்த்தி ஆகியோருக்கு, ஏன் பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது.இந்தியாவின் வெற்றி சரித்திரத்தில் இடம் பெற்றவர்களுக்கு, உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|