பதிவு செய்த நாள்
23 பிப்2017
00:40
புதுடில்லி : ஆடி நிறுவனம், இந்திய சொகுசு கார் சந்தையில், முதலிடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது.
சொகுசு கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆடி நிறுவனம், இந்தியாவிலும் வலுவாக கால் ஊன்றி வருகிறது. இந்திய சொகுசு கார் சந்தையில், மெர்சிடெஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யு., நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், முதலிடத்தை பிடிக்க, ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆடி கார்களுக்கு, இந்தியா, முக்கிய சந்தையாக திகழ்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், நவீன கார்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறோம். நடப்பாண்டில், 10 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, ஏ4 என்ற டீசல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. புதிதாக, ஏ3 செடான் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்தகைய முயற்சிகள் மூலம், இந்தியாவில், சொகுசு கார் விற்பனையில், எங்கள் நிறுவனம் முதலிடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|