பதிவு செய்த நாள்
23 பிப்2017
20:38
புதுடில்லி : ஜாகுவார் லேண்டு ரோவர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ஜாகுவார் எக்ஸ்.எப்., சொகுசு காரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோகித் சுரி கூறியதாவது:புதிய, ஜாகுவார் எக்ஸ்.எப்., சொகுசு கார், பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கும். இதன் விலை, 47.50 லட்சம் ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள, ஜாகுவார் எக்ஸ்.எப்., சொகுசு கார், இந்திய கார் சந்தையில், உறுதியான வளர்ச்சியை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகி உள்ள, இந்த சொகுசு காரில், மேம்படுத்தப்பட்ட தொடுதிரை, மெரிடியன் ஒலி அமைப்பு உள்ளிட்ட, பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|