பதிவு செய்த நாள்
23 பிப்2017
20:39
புதுடில்லி : ‘எச்1 பி’ விசா கட்டுப்பாடு உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகளால், இந்திய, ஐ.டி., துறைக்கு ஏற்படும் பாதிப்புகளை கூற, ‘நாஸ்காம்’ அமைப்பின் தலைவர், ஆர்.சந்திரசேகர் தலைமையிலான குழு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, இன்று சந்தித்து பேச உள்ளது.
அமெரிக்கா புறப்படும் முன், சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமெரிக்க அரசு, வெளிநாட்டு பணியாளர்களுக்கான, ‘எச்1 பி’ விசா கட்டணத்தை, இரு மடங்கு உயர்த்த உள்ளது. இதனால், இந்திய நிறுவனங்களின், அமெரிக்க கிளைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். அவற்றின் செயல்பாட்டு செலவினங்கள் அதிகரிக்கும்; திறமையான வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இந்திய, ஐ.டி., துறை, அமெரிக்காவில், 1.50 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் மொத்த, ஐ.டி., சேவை ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்கு, 62 சதவீதமாக உள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்திய, ஐ.டி., நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. இத்தகைய சூழலில், டொனால்டு டிரம்ப், உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் அமல்படுத்த உள்ள கொள்கை திட்டங்கள், இந்திய, ஐ.டி., நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். இது பற்றியும், இந்திய, ஐ.டி., நிறுவனங்களால், அமெரிக்காவில் உருவாகியுள்ள வேலைவாய்ப்பு உள்ளிட்ட விபரங்களையும், டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து, எடுத்துக் கூற உள்ளோம். அத்துடன், மார்ச், 2 வரை, அமெரிக்காவில் தங்கி, பார்லி., உறுப்பினர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|