பதிவு செய்த நாள்
25 பிப்2017
16:13
புதுடில்லி : கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே ஐஸ்கிரீம் விலை 5 முதல் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கிலோ ரூ.140 ஆக இருந்த பால் பவுடர் விலை, படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.240 ஐ எட்டி உள்ளது. பால் பவுடர் விலை உயர, உயர ஐஸ்க்ரீம் விலையும் கடந்த ஓராண்டாக சத்தமில்லாமல் சிறிது, சிறிதாக உயர்த்தப்பட்டு வந்தது. பால் பவுடர் மட்டுமின்றி, ஐஸ்கிரீம் தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூல பொருளான சர்க்கரையின் விலையும் 30 முதல் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. பால் கொழுப்புக்களின் விலையும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
மூலப் பொருட்களின் விலை உயர்வை அடுத்து ஐஸ்கிரீம் விலையை இந்த மாதம் முதல் 5 முதல் 8 சதவீதம் உயர்த்தி உள்ளது அமுல் நிறுவனம். கோடை காலம் துவங்க உள்ளதை அடுத்து நாள் ஒன்றிற்கு 650,000 லிட்டர் ஐஸ்கிரீம்களை அமுல் நிறுவனம் தயாரித்து வருகிறது. அமுல் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் ஐஸ்கிரீம் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|