இந்­திய மின்­னணு வர்த்­தகம் பங்­க­ளிக்க ‘வாட்ஸ் ஆப்’ விருப்பம்இந்­திய மின்­னணு வர்த்­தகம் பங்­க­ளிக்க ‘வாட்ஸ் ஆப்’ விருப்பம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 சரிவு ...
‘புதிய நீதி பரி­பா­லன நடை­மு­றை­களில் சட்ட வல்­லு­னர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு தேவை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2017
01:21

அம­ரா­வதி : ‘‘சட்டத் துறை வல்­லு­னர்­க­ளுக்கு, வணிக நீதி­மன்­றங்கள், சந்தை போட்டி கட்­டுப்­பாட்டு சட்­டங்கள், மின்­னணு துறை சட்­டங்கள் உள்­ளிட்ட, புதிய நீதி பரி­பா­லன நடை­மு­றைகள் குறித்த விழிப்­பு­ணர்வு மிகவும் அவ­சியம்,’’ என, சுப்ரீம் கோர்ட் நீதி­பதி மதன் பி.லோகுர் வலி­யு­றுத்தி உள்ளார். ஆந்­திரா தலை­நகர் அம­ரா­வ­தியில், ‘அறி­வுசார் சொத்­து­ரிமை, வர்த்­தகம் மற்றும் அதி­க­ரிக்கும் சட்­டங்கள்’ என்ற சர்­வ­தேச கருத்­த­ரங்கம் நடை­பெற்­றது. ஆந்­திரா பொரு­ளா­தார வளர்ச்சி வாரியம், ஜப்பான் வெளி­யு­றவு வர்த்­தக அமைப்­புடன் இணைந்து நடத்­திய இந்த கருத்­த­ரங்கில், ஆந்­திர முதல்வர் சந்­தி­ர­பாபு நாயுடு, சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டனர். ஆய்வு தேவைகருத்­த­ரங்கை துவக்கி வைத்து, மதன் பி.லோகுர் பேசி­ய­தா­வது:நாம் ஒவ்­வொ­ரு­வரும், அறி­வுசார் சொத்­து­ரிமை பிரச்­னையால், ஏதா­வது ஒரு விதத்தில் பாதிக்­கப்­ப­டு­கிறோம். அனைத்து துறைகளிலும், அறி­வுசார் சொத்­து­ரி­மைகள் உள்­ளன; அவை குறித்த விழிப்­பு­ணர்வு, சட்ட வல்­லு­னர்­க­ளா­கிய நமக்கு மிகவும் அவ­சி­ய­மாக உள்ளது. நாடு முழு­வதும், அதி­க­ளவில் வணிக நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­படும் என, தெரி­விக்­கப்­பட்டு, மும்பை, டில்லி நக­ரங்­களில் மட்டும் அதற்­கான ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்­கு­வதில், வணிக நீதி­மன்­றங்­களின் பங்­க­ளிப்பு, குறிப்­பி­டத்­தக்க வகையில் இருக்கும். அதனால், இத்­த­கைய நீதி­மன்­றங்­களை அமைப்­பது குறித்து, பிற நக­ரங்­க­ளிலும் ஆய்வு மேற்­கொள்ள வேண்டும். சர்­வ­தேச அளவில், வணிக நீதி­மன்­றங்கள் அமைப்­பது, சந்தை போட்­டியை ஒழுங்­கு­படுத்­து­வது, ‘சைபர்’ எனப்­படும், மின்­னணு துறை­க­ளுக்­கான புதிய சட்­டங்கள் வகுப்­பது ஆகி­யவை அதி­க­ரித்து வருகின்றன. இது போன்ற நீதி பரி­பா­லன நடை­மு­றைகள் குறித்து, நாமும் விவா­தித்து வரு­கிறோம். அதில், ஒரு­மித்த கருத்து எட்­டப்­பட்டால் மட்­டுமே, நீதித் துறையில், சீர்த்­திருத்­தங்­களை செய்ய முடியும்.அறிந்திருப்பது முக்கியம்நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள் உள்­ளிட்ட சட்ட வல்­லு­னர்கள் அனை­வரும், புதிய நீதி பரி­பா­லன நடை­மு­றை­களை அறிந்­தி­ருக்க வேண்டும்; அவற்­றுக்கு என்ன சட்­டங்கள் உள்­ளன; எத்­த­கைய சட்­டங்­களை உரு­வாக்­கலாம் என்­பது தெரிந்­தி­ருக்க வேண்டும். அதன்பின் தான், நீதித் துறையில் சீர்­தி­ருத்­தங்­களை கொண்டு வர முடியும். பார் கவுன்சில் துணை­யின்றி, அத்­த­கைய சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்ள முடி­யாது. அனை­வரும், உலக நிகழ்­வு­களை அறிந்­தி­ருப்­பது முக்­கியம். இது, நம்மை போன்ற நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள், கல்­வி­யா­ளர்கள் அல்­லது சாதா­ர­ண­மா­ன­வர்­க­ளுக்கும் கூட பொருந்தும்.இவ்­வாறு அவர் கூறினார்.

இந்­தி­யாவில், தொழில் துவங்­கு­வதை சுல­ப­மாக்­கு­வதில், வணிக நீதி­மன்­றங்­களின் பங்­க­ளிப்பு, குறிப்­பி­டத்­தக்க வகையில் இருக்கும். அதனால், இத்­த­கைய நீதி­மன்­றங்­களை அமைப்­பது குறித்து, டில்லி, மும்பை மட்­டு­மின்றி, பிற நக­ரங்­க­ளிலும் ஆய்வு மேற்­கொள்ள வேண்டும். மதன் பி.லோகுர்சுப்ரீம் கோர்ட் நீதி­பதி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)