பதிவு செய்த நாள்
02 மார்2017
00:01
புதுடில்லி : உள்நாட்டில், கார் விற்பனையில் முன்னணியில் உள்ள, மாருதி சுசூகி இந்தியா, கடந்த பிப்ரவரியில், 1.30 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 1.17 லட்சம் கார்களாக இருந்தது.
இதே காலத்தில், அந்நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை, 11.7 சதவீதம் உயர்ந்து, 1.08 லட்சத்தில் இருந்து, 1.20 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சிறிய வகை கார்களான ஆல்டோ, வேகன் ஆர் விற்பனை, 35 ஆயிரத்து, 495ல் இருந்து, 33 ஆயிரத்து, 079 ஆக குறைந்துள்ளது. சுவிப்ட், எஸ்டிலோ, டிசையர், பலேனோ ஆகிய மாடல் கார்களின் விற்பனை, 42 ஆயிரத்து, 970ல் இருந்து, 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சியாஸ் மாடல் கார் விற்பனை, 14 சதவீதம் உயர்ந்து, 5,886 ஆக அதிகரித்துள்ளது. ஜிப்சி, கிராண்ட் விட்டாரா, எர்டிகா, எஸ் கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய மாடல் கார்கள் விற்பனை, 8,484ல் இருந்து, 17 ஆயிரத்து, 863 ஆக உயர்ந்துள்ளது.
ஆம்னி, ஈகோ ஆகிய வேன்களின் விற்பனை, 12 ஆயிரத்து, 482ல் இருந்து, 14 ஆயிரத்து, 195 ஆக அதிகரித்துள்ளது. பிப்ரவரியில், மாருதி சுசூகி, 9,545 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 9,336 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|