பதிவு செய்த நாள்
03 மார்2017
23:47
சென்னை : டி.வி.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த, டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ், சரக்கு சேவை தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இங்கிலாந்தில் செயல்படும், எஸ்.பி.சி., இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கையகப்படுத்தி உள்ளது. இதற்காக, 100 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், இங்கிலாந்தில், டி.வி.எஸ்., ரிகோ சப்ளை செயின் சர்வீசஸ் என்ற பெயரில் செயல்படுகிறது. தற்போது ஆண்டுக்கு, 165 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட, எஸ்.பி.சி., இன்டர்நேஷனலின், 60 சதவீத பங்குகளை, டி.வி.எஸ்., ரிகோ கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம், அந்நாட்டில் நிறுவனத்தின் சேவை அதிகரிக்கும்.கடந்த, 10 ஆண்டுகளில், டி.வி.எஸ்., லாஜிஸ்டிக்ஸ், இங்கிலாந்தில், 617 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தற்போது, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 3,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|