பதிவு செய்த நாள்
05 மார்2017
00:35
சென்னை : தொலை தொடர்பு சேவையில், புதிதாக,‘ ஏரோவாய்ஸ்’ எனும் நிறுவனம் அறிமுகமாக உள்ளது. இந்நிறுவனம், ஆட்பே எனும் மொபைல் பேமென்ட் துறை சார்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது குறித்து, ஆட்பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவகுமார் குப்புசாமி கூறியதாவது:இந்தியாவில், பல நிறுவனங்கள், தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அந்நிறுவனங்கள், தங்களின் அலைக்கற்றைகளை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளன. அவற்றை, புதிய நிறுவனங்கள் பயன்படுத்தி, தொலை தொடர்பு சேவை வழங்க, மத்திய தொலை தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த சேவைக்கு, எம்.வி.என்.ஓ., என்று பெயர். அந்த சேவையின் அனுமதி, ஏரோவாய்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.இதன் மூலம், எங்கள் நிறுவனம், தற்போதுள்ள தொலை தொடர்பு நிறுவனங்களின், அலைக்கற்றைகளை மட்டும் பயன்படுத்தும். எங்கள் சேவையை வழங்க, வாடிக்கையாளர்களுக்கு, புது, ‘சிம்’ கார்டு வழங்கப்படும். அதன் மூலம், ‘3ஜி, 4ஜி’ சேவைகளை பெறலாம். மூன்று ஆண்டுகளில், 1,000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது. ஏப்., 14 முதல், ஏரோவாய்ஸ் தொலை தொடர்பு சேவை துவக்கப்பட உள்ளது. கட்டண விபரங்கள், அப்போது தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|