பதிவு செய்த நாள்
21 மார்2017
01:01
ஜோகன்ஸ்பர்க் : அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம், உலோகம் முதல் கனிம சுரங்கம் வரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
அனில் அகர்வால், சமீபத்தில், தென்னாப்ரிக்காவின், ஆங்லோ அமெரிக்கன் என்ற நிறுவனத்தின் பங்குகளை, 240 கோடி டாலருக்கு வாங்கினார். இதன் மூலம், அந்நிறுவனத்தில், அனில் அகர்வாலின் வேதாந்த குழுமத்தின் பங்கு முதலீடு, 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்தில், 13.5 சதவீத பங்கு முதலீடு செய்துள்ள, தென்னாப்ரிக்க பொது முதலீட்டு கழகத்திற்கு அடுத்த இடத்திற்கு, அனில் அகர்வால் முன்னேறியுள்ளார்.
அதனால், அவர், விரைவில் ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்தில் மேலும் முதலீடு செய்து, அதை கையகப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அதற்கு வலுசேர்க்கும் வகையில், தென்னாப்ரிக்கா மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளில், ஆங்லோ அமெரிக்கன் மேற்கொண்டு வரும் வர்த்தகம், தமக்கு பிடித்திருப்பதாக, அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|