ரிலையன்ஸ் ஜியோ சேவை; 82 சதவீதம் பேர் தொடர முடிவுரிலையன்ஸ் ஜியோ சேவை; 82 சதவீதம் பேர் தொடர முடிவு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.48 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.48 ...
அடுத்து வருகிறது தனியார் பயணிகள் ரயில்: கூடுதல் வருவாய்க்கு வழி தேடும் ரயில்வே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2017
00:16

புது­டில்லி : சரக்கு ரயில்­க­ளுக்­கான தனி வழித்­த­டம் அமைக்­கும் திட்­டம் செயல்­பாட்­டிற்கு வந்­த­பின், பயன்­பாடு குறை­யக்­கூ­டிய பொது ரயில் தடங்­களில், பய­ணி­கள் ரயில்­களை இயக்க, தனி­யா­ருக்கு அனு­மதி வழங்­கு­வது குறித்து, இந்­திய ரயில்வே ஆலோ­சித்து வரு­கிறது.
பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்து வாயி­லான வரு­வாய் குறைந்து வரு­வதை சமா­ளிக்க, இத்­திட்­டம் உத­வும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இந்­திய ரயில்வே, டி.எப்.சி.சி.ஐ.எல்., என்ற பொதுத் துறை நிறு­வ­னத்­தின் கீழ், சரக்கு ரயில்­க­ளுக்­கென, பிரத்­யேக சரக்கு ரயில் தடங்­கள் அமைக்­கும், ‘தனி சரக்கு ரயில் தடம்’ என்ற திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கிறது.
சரக்கு ரயில்இதன்­படி, ஆறு திசை­களை இணைக்­கும் வகை­யில், 10,300 கி.மீ., துாரத்­திற்கு, சரக்கு ரயில் போக்­கு­ வ­ரத்து தடங்­கள் அமைக்­கப்­பட உள்ளன.அவற்­றில், கிழக்கு உ.பி.,யில், முகுல்­ச­ராய் நக­ரில் இருந்து, பஞ்சாப் மாநி­லம், லுாதியானா நகர் வரை­யும்; மேற்கு உ.பி.,யில், தாத்ரி நக­ரில் இருந்து, மஹா­ராஷ்­டிர மாநி­லம், மும்­பை­யில் உள்ள, ஜவ­கர்­லால் நேரு துறை­மு­கம் வரை­யும் உள்ள, 3,300 கி.மீ., ரயில் தடப் பணி­கள் வேக­மாக நடை­பெற்று வரு­கின்றன.இப்­ப­ணி­களை, 2020 டிசம்­ப­ருக்­குள் முடித்து, சரக்கு ரயில் போக்­கு­வ­ரத்தை துவக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.
இதர, சென்னை – டில்லி; சென்னை – கோவா; மும்பை – ஹவுரா மற்­றும் ஹவுரா – விஜ­ய­வாடா ஆகிய நான்கு சரக்கு ரயில் தடங்­களின் ஆய்வு முடி­வ­டைந்து, இன்­னும் பணி­கள் துவக்­கப்­ப­டா­மல் உள்ளன.தற்­போது, பொது ரயில் தடத்­தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும், சரக்கு ரயில் போக்­கு­வ­ரத்­தில், 70 சத­வீ­தம், தனி சரக்கு ரயில் தடத்­திற்கு மாறும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
ஆடம்பர ரயில்கள்அத­னால், பொது ரயில் தடத்­தில், மேலும் அதிக ரயில்­களை இயக்­க­வும், பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்தை விரை­வாக மேற்­கொள்­ள­வும் வழி பிறக்­கும்.அத்­த­கைய சூழ­லில், போக்­கு­வ­ரத்து குறை­யும் ரயில் தடங்­களில், பய­ணி­கள் ரயில்­கள், ஆடம்­பர ரயில்­கள், சரக்கு பெட்­டக ரயில்­கள் ஆகி­ய­வற்­றின் போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்ள, தனி­யா­ருக்கு அனு­மதி அளித்து, வரு­வாய் ஈட்ட, இந்­திய ரயில்வே பரி­சீ­லித்து வரு­கிறது. ரயில் தடங்­களின் திறனை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக் கொள்ள உத­வும் இத்­திட்­டம் குறித்த சாத்­தி­யக்­கூ­று­களை ஆராய்ந்து, அறிக்கை அளிக்­கும் பொறுப்பு, ஆலோ­சனை நிறு­வ­னம் ஒன்­றி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு உள்­ளது.
மொத்த வரு­வாய்நடப்பு நிதி­யாண்­டில், இந்­திய ரயில்­வே­யின் மொத்த வரு­வாய், 1.17 லட்­சம் கோடி ரூபா­யாக இருக்­கும். இதில், பய­ணி­கள் ரயில் போக்­கு­வ­ரத்து வரு­வாய், கடந்த நிதி­யாண்­டின் இலக்கை விட, சற்று குறைந்து, 50,125 கோடி ரூபாயை எட்­டும். வரும், 2017 – 18ம் நிதி­யாண்­டில், இந்­திய ரயில்­வே­யின் வரு­வாய், மிகப்­பெ­ரிய மாற்­ற­மின்றி, 1.18 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கே இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)