பதிவு செய்த நாள்
28 மார்2017
02:13
புதுடில்லி : மத்திய ஜவுளி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமைச்சகம், புதிய ஜவுளி கொள்கையை உருவாக்கி வருகிறது. இதற்காக, மாநில அரசுகள், ஜவுளித் துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அடுத்த மாதம், புதிய ஜவுளி கொள்கை வெளியிடப்படும். ஜவுளி ஏற்றுமதியை, 2024 – 24ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி டாலராக உயர்த்தி, 3.50 கோடி பேருக்கு, கூடுதலாக வேலைவாய்ப்பு வழங்க, புதிய ஜவுளி கொள்கை துணை புரியும்.
இக்கொள்கையில், கைத்தறி துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.சிறிய சந்தைகளுக்கான, பிரீமியம் கைத்தறி துணிகளுடன், பாரம்பரிய கைத்தறி துணி வகைகள், அருகி வரும் கைவினை பொருட்கள் ஆகியவற்றை பராமரிக்கவும், பாதுகாக்கவும், தனி கவனம் செலுத்தப்படும்.உள் அலங்காரம் மற்றும் வாழ்க்கை பாணிகளுக்கு ஏற்ற, தரமான கைத்தறி பொருட்களை தயாரிப்போருக்கு, ஊக்கச்சலுகை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|