மும்பையில் கப்பல் துறை வளர்ச்சி குறித்த கருத்தரங்குமும்பையில் கப்பல் துறை வளர்ச்சி குறித்த கருத்தரங்கு ... பங்கு சந்தையில் பெருகும் முதலீடுகள்; ரூ.20,000 கோடி திரட்ட நிறுவனங்கள் திட்டம் பங்கு சந்தையில் பெருகும் முதலீடுகள்; ரூ.20,000 கோடி திரட்ட நிறுவனங்கள் ... ...
உள்­நாட்டு விமான சேவை­யில் ஜப்­பானை விஞ்­சி­யது இந்­தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2017
02:16

புதுடில்லி : கடந்த, 2016ல், உள்நாட்டு விமான போக்குவரத்தில், பயணிகளை கையாள்வதில், இந்தியா, ஜப்பானை விஞ்சி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இது குறித்து, ஆஸ்திரேலியாவின், ‘காபா’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு, உள்நாட்டு விமான போக்குவரத்தில், இந்தியா, 10 கோடி பயணிகளை கையாண்டு, ஜப்பானை விஞ்சி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஜப்பான், உள்நாட்டு விமான போக்குவரத்தில், 9.70 கோடி பயணிகளை கையாண்டு, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.அமெரிக்கா, சீனா ஆகியவை, முறையே, 71.90 கோடி மற்றும் 43.60 கோடி பயணிகளை கையாண்டு, முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
உள்நாடு மற்றும் வெளிநாடு விமான பயணிகளை கையாண்டதில், இந்தியாவும், பிரிட்டனும், நான்காவது இடத்தில் உள்ளன. ஜப்பான், 2016ல், மொத்தம், 14.10 கோடி விமான பயணிகளை கையாண்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா, 13.10 கோடி விமான பயணிகளை கையாண்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகியவை, முறையே, 81.50 கோடி மற்றும் 49 கோடி விமான பயணிகளை கையாண்டு, முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா, திட்டமிட்டதற்கு முன்பாகவே, மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். எனினும், அமெரிக்கா, சீனாவை விஞ்ச நீண்ட ஆண்டுகள் ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3வது இடம்உள்நாட்டு விமான சேவையில், கடந்த இரு ஆண்டுகளாக, இந்தியா, 20 – 25 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. அதனால், 2018 மார்ச்சில், ஒட்டுமொத்த விமான சேவையில், இந்தியா, மூன்றாவது இடத்தை பிடிக்கும்.-கபில் கவுல், ‘காபா’ இந்திய பிரிவின் தலைவர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)