பதிவு செய்த நாள்
31 மார்2017
09:56
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 31) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் வங்கிகள் மற்றும் நிதித்துறை பங்குகளில் நெருக்கடியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிந்து 29,580.42 புள்ளிகளாகவும், நிப்டி 17.15 புள்ளிகள் சரிந்து 9156.60 புள்ளிகளாகவும் இருந்தன. இருப்பினும் 9.45 மணியளவில் இந்திய வங்கித்துறை பங்குகளில் ஏற்றம் ஏற்பட்டதால் பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. 9.45 மணியளவில் சென்செக்ஸ் 6.03 புள்ளிகள் உயர்ந்து 29,653.45 புள்ளிகளாகவும், நிப்டி 4.60 புள்ளிகள் உயர்ந்து 9178.35 புள்ளிகளாகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|