பதிவு செய்த நாள்
18 ஏப்2017
04:11
புதுடில்லி : பி.எஸ்.இ., என, சுருக்கமாக அழைக்கப்படும், மும்பை பங்குச் சந்தை, பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் குறித்த தகவல்களை, உடனுக்குடன், முதலீட்டாளர்கள் அறிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், 5,000த்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்நிறுவனங்கள், அவற்றின் இயக்குனர் குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள், விரிவாக்கத் திட்டங்கள், நிதி நிலை அறிக்கைகள், டிவிடெண்டு அறிவிப்புகள், புதிய நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், பி.எஸ்.இ.,க்கு தெரிவிக்கின்றன.இத்தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின், பி.எஸ்.இ., அதன் வலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியிடுகிறது. இந்நிலையில், தற்போது, நிறுவன அறிவிப்புகளுக்கான புதிய நடைமுறையை, பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, ஒரு நிறுவனம், பி.எஸ்.இ.,க்கு அனுப்பும் தகவல்களை, அதே வேகத்தில், முதலீட்டாளர்களும் பார்க்கலாம். அதே சமயம், ஊடகங்களுக்கும் அத்தகவல்கள் விரைந்து அனுப்பி வைக்கப்படும்.அதன் அடிப்படையில், பங்கு முதலீடுகள், பங்கு வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து, முதலீட்டாளர்கள் தங்கள் நிலைப்பாட்டை சீரமைத்துக் கொள்ள முடியும். ‘முதலீட்டாளர்களுக்கு, ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும், நிறுவனங்கள் அளிக்கும் தகவல்கள், உடனுக்குடன் கிடைக்கும். அத்துடன், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் உத்தரவுப்படி, நிறுவனங்கள் அளிக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும், அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, தகவல்கள் மேம்படுத்தப்படும்’ என, பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|