பதிவு செய்த நாள்
19 ஏப்2017
01:56
நியூயார்க் : அமெரிக்காவின், ‘ஸ்நாப்சாட்’ நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்நாப்சாட் நிறுவனர் இவான், இந்தியாவை இகழ்ந்ததாக வெளியான செய்தியை மறுக்கிறோம்.
முன்னாள் ஊழியர் அந்தோணி, நிறுவனத்தின் மீது அதிருப்தியில் உள்ளார். அதன் காரணமாகவே அவர், ‘ஸ்நாப்சாட் மொபைல் போன் ஆப், பணக்காரர்களுக்கு உருவாக்கப்பட்டது; இந்தியா, ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் அதை விரிவுபடுத்த விரும்பவில்லை’ என, இவான் கூறியதாக, சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.
உண்மையில், ஸ்நாப்சாட் ஆப் அனைவருக்குமானது. உலகம் முழுவதிலும், அதை இலவசமாக பதிவிறக்கி வருகின்றனர். இந்தியர்கள், ஸ்நாப்சாட் ஆப்பை பயன்படுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உலகளவில் உள்ள ஸ்நாப்சாட் சமூகத்தினருக்கும் எங்கள் நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவை பற்றி கூறியதற்கு, இவான் பகிரங்க மன்னிப்பு கோரும் வரை, ஸ்நாப்சாட் ஆப் புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என, இந்திய ‘நெட்டிசன்’கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் காரணமாக, அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தை யில், ஸ்நாப்சாட் நிறுவனத்தின் பங்கு, கடந்த ஒரு மாதத்தில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|