பதிவு செய்த நாள்
21 ஏப்2017
00:00
புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 914.12 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 702.11 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், இந்த வங்கியின் மொத்த வருவாய், 29.4 சதவீதம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபாயில் இருந்து, 5,606.38 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, யெஸ் பேங்க் வங்கியின் நிகர வாராக்கடன், 1.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 0.76 சதவீதமாக குறைந்திருந்தது. அண்மையில், கடன் பத்திரங்களை வெளியிட்டு, 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|