பதிவு செய்த நாள்
23 ஏப்2017
06:37
மும்பை : ‘தயாரிப்பு பொருட்களின் விலை, தொடர்ந்து உச்சத்தில் இருக்கும்பட்சத்தில், ஜவுளி, வாகனம், ரசாயனம், நவரத்தினங்கள் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதி அதிகரிக்கும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம், நாட்டின் ஏற்றுமதி குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:மேற்கத்திய நாடுகளில், பொருட்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது. அதே சமயம், வளரும் நாடுகளில் தயாரிப்பு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.இதனால், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். குறிப்பாக, ஜவுளி, வாகனம், வாகன உதிரி பாகங்கள், ரசாயனங்கள், நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி உயரும்.இரு ஆண்டுகளாக சரிவடைந்து வந்த ஏற்றுமதி, கடந்த சில மாதங்களாக, ஏற்றம் கண்டு வருகிறது.கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், டாலர் அடிப்படையிலான ஏற்றுமதி, தொடர்ந்து, ஏழு மாதங்களாக உயர்ந்து, மார்ச்சில், 27.6 சதவீத வளர்ச்சியை கண்டது. இதன் காரணமாக, முழு நிதியாண்டில், ஏற்றுமதி, 4.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 27,464 கோடி டாலராக அதிகரித்தது.ஆனால், முந்தைய, 2015 – 16ம் நிதியாண்டில், ஏற்றுமதி வளர்ச்சி, 15.5 சதவீதம் என்றளவில் பின்னடைவைக் கண்டு, 26,230 கோடி டாலராக காணப்பட்டது.மார்ச்சில், எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத ஏற்றுமதி, முறையே, 69.1 மற்றும் 23.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது.பொருட்களின் விலை உயர்வு, ஏற்றுமதி நிறுவனங் களுக்கு சாதகமாக உள்ளது. இதனால், அவற்றின் மொத்த லாபம் உயரும் என்பதுடன், தர நிர்ணய குறியீடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|