பதிவு செய்த நாள்
23 ஏப்2017
06:38
புதுடில்லி : பொது இடங்களில், ‘வை பை’ தொழில்நுட்பம் மூலம், இணைய வசதியை வழங்கும், ‘பப்ளிக் டேட்டா ஆபிஸ்’ என்ற சாதனத்தை, மத்திய அரசின், சி – டாட் நிறுவனம் உருவாக்கி உள்ளது.இந்த சாதனத்தை, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, டில்லியில் அறிமுகப்படுத்தி பேசியதாவது:குக்கிராமங்களிலும் இணைய வசதி கிடைக்க வேண்டும் என, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு, இந்த பப்ளிக் சர்வீஸ் டேட்டா சாதனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.ஒரு காலத்தில், பொது தொலைபேசி கூண்டுகள் இருந்தது போல, இந்த சாதனத்தை ஆங்காங்கே நிறுவி, இணைய சேவை வழங்கலாம். மாட்டு வண்டியில் கூட, இந்த சாதனத்தை பொருத்தி, கிராமங்களில் இணைய வசதி அளிக்கலாம்.ஒரே நேரத்தில், 100 மொபைல் போன்களுக்கு, ‘2ஜி, 3ஜி அல்லது 4ஜி’ தொழில்நுட்பத்தில், 500 மீ., சுற்றளவில், இணைய வசதியை இந்த சாதனம் வழங்கும்.இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கூப்பன்களை பெற்று, பொது இடங்களில், ‘லேப் – டாப், மொபைல் போன்’ போன்றவற்றின் மூலம், இணையத்தை பயன்படுத்தலாம். மொத்தத்தில், பொது தொலைபேசி போல, பப்ளிக் டேட்டா ஆபிஸ் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|