பதிவு செய்த நாள்
25 ஏப்2017
01:16
பாதாளகங்கா : ‘‘பங்குச் சந்தையில், அதிகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமானால், நாடு முழுவதும் நிதி கல்விஅறிவு பரவ வேண்டும்,’’ என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் அஜய் தியாகி தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிராவில், நவி மும்பை அருகேயுள்ள, பாதாளகங்கையில், தேசிய பங்குச் சந்தைகள் பயிற்சி மையம் உள்ளது. இதில், தேசிய நிதி கல்வியறிவு மதிப்பீட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அஜய் தியாகி பேசியதாவது: பங்குச் சந்தைகள் தற்போது எழுச்சி பெற்றுள்ளன. இத்தகைய சூழலில், ஒரு சிலர் மட்டுமே, இச்சந்தையில் பங்கேற்பது என்பது, சரியல்ல. மும்பை, ஆமதாபாத் ஆகியநகரங்களைச் சேர்ந்தவர்கள் தான், பங்குச் சந்தைகளில் அதிகளவில் முதலீடு மேற்கொள்கின்றனர் என்ற நிலை மாற வேண்டும். நாடு முழுவதும், பரவலானோர், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு, நிதி கல்வியறிவும், நிதி செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வும் முக்கியம். பங்குச் சந்தைகளின் இயக்கம் குறித்த புரிதல் அவசியம்.
ஒருசிலர், பங்குச் சந்தையில் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க, வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்கின்றனர். இதை, நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நிதி கல்வியறிவும், நிதி நிர்வாகம் குறித்த விழிப்புணர்வும் தான், பங்குச் சந்தைகளில் முதலீடுகளை அதிகரிக்க துணை புரியும்.இத்தகைய பணியை, தேசிய பங்குச் சந்தைகள் பயிற்சி மையம் செய்து வருகிறது. இதன், தேசிய நிதி கல்விஅறிவு மதிப்பீட்டு தேர்வில், 4,000 பள்ளி களைச் சேர்ந்த, 5 லட்சம் மாணவர்கள் பங்கேற்று, வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|