பதிவு செய்த நாள்
27 ஏப்2017
00:43
மும்பை : எஸ்.பி.ஐ., ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச்சுடன் முடிந்த காலாண்டில், நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, 10 – 12 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, நுகர்பொருள், வங்கி ஆகிய துறைகளில், நிகர வருவாய் அதிகரித்திருக்கும். வாகனம், பொறியியல் சாதனங்கள், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனங்கள், இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நிகர லாபத்தை பொறுத்தவரை, மருந்து, உலோகம், பொறியியல் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இரட்டை இலக்க வளர்ச்சியை காண வாய்ப்புள்ளது. மத்திய அரசு, அடிப்படை கட்டமைப்பு, வீட்டுவசதி உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதால், நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய், நன்கு இருக்கும். எனினும், நடப்பு ஏப்ரலில், தயாரிப்புத் துறை வளர்ச்சியில் பின்னடைவு இருக்கும் என, தெரிகிறது. இது, ‘எஸ்.பி.ஐ., காம்போசிட் இன்டெக்ஸ்’ 50 புள்ளிக்கும் குறைவாக, 49.3 புள்ளியாக குறைந்துள்ளதை வைத்து மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|