பதிவு செய்த நாள்
27 ஏப்2017
15:12
புதுடில்லி : மாறுபட்ட புதிய அடையாளங்களுடன் கூடிய ரூ.5 மற்றும் 10 நாணயங்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அலகாபாத் ஐகோர்ட் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயமும், தேதிய காப்பக கட்டிடத்தின் 125-வது நிறைவு விழா ஆகியவற்றை குறிக்கும் அடையாளங்களுடன் 10 ரூபாய் நாணயமும் அச்சிட்டு விரைவில் வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அலகாபாத் ஐகோர்ட் 150 ஆண்டுகள் என்ற லோகோ, தொடக்க மற்றும் நிறைவு ஆண்டுகள் அச்சடிக்கப்பட்டு நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல், 10 ரூபாய் நாணயத்தின் பின்புறத்தில் தேசிய காப்பக கட்டிட 125 ஆண்டு விழாவை குறிக்கும் லோகோ மற்றும் ஆண்டுகள் குறிப்பிடப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, முன்னர் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்திகள் பரவிய நிலையில், ரிசர்வ் வங்கி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|