பதிவு செய்த நாள்
28 ஏப்2017
01:21
மும்பை : ‘இந்தாண்டு அட்சய திருதியை தினத்தில், தங்க நகை விற்பனை, 30 சதவீதம் அதிகரிக்கும்’ என, தங்க நகை வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அட்சய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது. அதை ஒட்டி, தங்க நகை கடைகளில் கூட்டம் அலைமோதும்.
இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் கூட்டமைப்பின் தலைவர் நிதின் கந்தல்வால் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பு அட்சய திருதியை தினத்தில், தங்க நகை விற்பனை, 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார்.
உலக தங்க கவுன்சில், இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது: இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால், சர்வதேச சந்தையுடன் ஒப்பிடும் போது, உள்நாட்டில் தங்கம் விலை குறைவாகவே உள்ளது. அதனால், தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வமுடன் முன்வருவர். எனினும், அறிமுகமாக உள்ள, ஜி.எஸ்.டி., மற்றும் ரொக்க கட்டுப்பாடு ஆகியவை குறித்து, இத்துறையினரின் கவலை நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|