பதிவு செய்த நாள்
28 ஏப்2017
10:28
மும்பை : ஏப்ரல் 26ம் தேதி அதிரடியாக உயர்ந்து வரலாறு படைத்த இந்திய பங்குச்சந்தைகள், நேற்று முதல் தொடர்ந்து சரிந்து வருகின்றன. நேற்று பிற்பகலுக்கு பிறகு பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, இன்றும் தொடர்கிறது.
பார்தி ஏர்டெல், ஐடிசி போன்ற பெரு நிறுவன பங்குகளின் சரிவு காரணமாக பங்குச்சந்தைகள் இன்று (ஏப்ரல் 28) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 107.13 புள்ளிகள் சரிந்து 29,922.61 புள்ளிகளாகவும், நிப்டி 38.55 புள்ளிகள் சரிந்து 9303.60 புள்ளிகளாகவும் உள்ளன.
கடந்த 2 நாட்களாக 30,000 புள்ளிகளுக்கு உயர்ந்து காணப்பட்ட சென்செக்ஸ், இன்று 30,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், பேங்க் ஆப் பரோடா ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், பார்தி ஏர்டெல், ஐடிசி பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|