பதிவு செய்த நாள்
30 ஏப்2017
03:43
புதுடில்லி:கூகுள் நிறுவனம், ‘இந்தியாவுக்கான தீர்வு’ என்ற புதிய திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சென்னை, மதுரை, நாக்பூர் போன்ற பெரிய மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தொழில் முனைவோருக்கு, அவர்கள் துறை சார்ந்த சாப்ட்வேர் தீர்வுகளை உருவாக்க, தேவையான உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.
குறிப்பாக, வேளாண் தொழில்நுட்பம், ஆரோக்கிய பராமரிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில், மொபைல் போன் சாப்ட்வேர் செயல்பாடுகளின் அடிப்படையில், தீர்வுகள் உருவாக்கப்படும்.இதற்காக, ஓராண்டில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான, சாப்ட்வேர் டெவலப்பர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு உதவ, கூகுள் முடிவு செய்துள்ளது.
‘‘இந்த திட்டத்தின் மூலம், கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறும் வகையில், இந்தியாவுக்கான சிறந்த தீர்வுகளை, ஒரே குடையின் கீழ் உருவாக்கி, ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,’’ என, கூகுள் இந்தியா நிறுவனத்தின் திட்ட மேலாளர், கார்திக் பத்மனாபன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|