பதிவு செய்த நாள்
01 மே2017
04:12
இந்திய பொருளாதாரம், அடுத்த ஐந்தாண்டுகளில், பிரிட்டனை மிஞ்சும் வகையில் அமையும் என, ஐ.எம்.எப்., அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதியமான, ஐ.எம்.எப்., இந்திய பொருளாதாரம் தொடர்பான வளர்ச்சி கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. 2022ல், இந்திய பொருளாதாரம், நான்காம் இடத்தில் உள்ள, ஜெர்மனியை விட முன்னேறும் என்றும், பிரிட்டனை, முதல் ஐந்து இடங்களில் இருந்து வெளியேற்றும் வாய்ப்பு இருப்பதாக, இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இதை சாதிக்க, இந்திய பொருளாதார வளர்ச்சி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரி சீர்திருத்தம், உற்பத்தி திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்துவது ஆகியவை, சவால்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன.
வர்த்தக முதலீட்டை ஊக்கு விப்பது, உள்கட்டமைப்பில் உள்ள குறைகளை சரி செய்வது ஆகியவையும், முக்கிய சவால்களாக அமைந்துள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாதிப்பில் இருந்து, இப்போது தான், இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது. வங்கிகளின் வாராக்கடன்களும், முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. ஆனால், இவற்றை எல்லாம் மீறி, இந்திய வளர்ச்சி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|