பதிவு செய்த நாள்
02 மே2017
10:38
மும்பை : மூன்றுநாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மே., 2-ம் தேதி) நல்ல உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 134.33 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 30 ஆயிரம் புள்ளிகளை கடந்து 30,052.73-ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 37.75 புள்ளிகள் உயர்ந்து 9,341.85-ஆக வர்த்தகமாகின.ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், உலோகம், ஆட்டோமொபைல், வங்கி மற்றும் ஐடி., உட்பட முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுவதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.70 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.27 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|