பதிவு செய்த நாள்
21 மே2017
07:15
புதுடில்லி: வியட்நாம் தலைநகர் ஹனோயில், இன்று, ஆர்.சி.இ.பி., எனப்படும், பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு மாநாடு துவங்குகிறது. இதில், இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட, 16 உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டில், சரக்கு, சேவைகள், முதலீடுகள், பொருளாதாரம், தொழில்நுட்ப கூட்டுறவு, அறிவுசார் சொத் துரிமை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், உறுப்பு நாடுகளின் பரஸ்பர வர்த்தகத்தில், சரக்குகள் மீதான அதிகபட்ச வரியை குறைப்பது அல்லது நீக்குவது குறித்து விவாதிக்கப்படும்.
ஆர்.சி.இ.பி., அமைப்பில், சிங்கப்பூர், மலேஷியா, மியான்மர், புருனே, கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், லாவோஸ், வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய, 10 ஆசியான் நாடுகளும், தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய, ஆறு நாடுகளும் உள்ளன. ஆசியான் நாடுகள், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றுடன், இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|